AddThis

Bookmark and Share

December 22, 2008

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது



நீ உன் காதலை

என்னிடம் சொல்ல

வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு

அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?



நான் வீட்டில் இருக்கிறேனா

என்று பார்த்து வரச்சொல்லி

உன் தோழியை

அனுப்பி வைப்பாயே

நினைவிருக்கிறதா ?



உனக்கு தலை பின்னிக்

கொண்டிருக்கும் அம்மா

பார்க்க முடியாது என்ற

தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்

பார்த்து கண்சிமிட்டி

‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”

என்று வம்புக்கிழுத்தாயே

நினைவிருக்கிறதா ?



ஒரு திருமண மண்டபத்தில்

‘அதோ அவர்தான்”

என்று பார்வையாலேயே

தோழிகளுக்கு என்னை

அடையாளம் காட்டினாயே

நினைவிருக்கிறதா?



என் காதல் கடிதங்கள்

உன் தோழியின் பெயரில்

வருமே அந்த

அந்த கவிதைகள்

நினைவிருக்கிறதா ?



தொலைபேசியில்

நான் உன்னுடன் பேசிக்கொண்டு

இருக்கும்போது

"வேற ஒன்னும் இல்லையா "

என்று வழிவாயே

நினைவிருக்கிறதா ?



துணி உலர்த்த மாடிக்குப்போகும்

போதெல்லாம்

‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”

என்று உன் அம்மா திட்டுவாங்களே

நினைவிருக்கிறதா ?



நாம் முதல் முறையாக

அருகருகே அமர்ந்து

பேசிக்கொண்டு இருந்த

அந்த பெரிய கரவீடு

நினைவிருக்கிறதா ?



நாளிதழ் வந்ததும்

உனக்கு நானும்

எனக்கு நீயும்

ராசி பலன்கள்

பார்ப்போமே

நினைவிருக்கிறதா?


நான் தனிமையில் படிக்கிறேன்

என்று சொல்லி

உன் பார்வைக்காக

மொட்டைமாடிக்கு

வருவேனே

நினைவுக்கிறதா ?


அடுத்து இவளுக்குத்தான்

கல்யாணம்

என்று சொன்னதும்

ஏனோ என்னை கள்ளத்தனமாக

பார்த்தாயே ஒரு பார்வை

நினைவிருக்கிறதா ?













நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது

0 comments: