1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.
3.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.
4.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
5.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.
6.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.
7.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்
8.அகங்காரம் அறிவை வளர்க்காது.
________________
உண்மக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது
NET la padichathu.......
January 15, 2011
தெரிந்து கொள்வோம்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 9:58 PM 0 comments Links to this post
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம், படித்ததில் பிடித்தது
நீ எதை அதிகம் விரும்பினாய்?
நீ எதை அதிகம் விரும்பினாய்?

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.
சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.
இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. “ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 9:49 PM 0 comments Links to this post
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், எனக்கு பிடித்தது, தெரிந்து கொள்வோம்
January 14, 2011
இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
![[karunanithi-election.jpg]](http://1.bp.blogspot.com/_lFwfn4LXu4I/RmegrVzSvdI/AAAAAAAAAIk/GO7-Ztaqdt4/s1600/karunanithi-election.jpg)
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதிகருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி. பக்கம் 81,82 ல்.............. *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம். இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................ * பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். பக்கம் 92,93 ல்.............................. * பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார். இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம் 3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு 4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது) 5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம் 6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம் 7. அமிர்தம் வீடு- கோபாலபுரம் 8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம் 9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு 10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி 11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம் 12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்) 13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி) 14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு) 15. தயாநிதி மாறன் வீடு 16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை 17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு 18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில் 19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை 20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில் 21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை 22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம் 23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம் 25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி 26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக 27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது 28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை 29. அந்தமான் தீவின் நிலங்கள் 30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள் 31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு 32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை 33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில் 34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது 35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு 36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள் 37. செல்வம் வீடு 38. முக.ஸ்டாலின் சொத்துக்கள் 39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை. 40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள் 41. செல்வம் வீடு-பெங்களுர் 42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர் 43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை 44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை. 45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள் 46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை. 47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 49 .additional properties after semmuzi coimbatore farm house 50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks) extra extra extra extra இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள் |
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 8:11 AM 0 comments Links to this post
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம்
January 13, 2010
HAPPY PONGAL


பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.
பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.
எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.
எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.
பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.
பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.
கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.
புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.
அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 7:52 AM 0 comments Links to this post
December 08, 2009
சிங்கப்பூரில் கார்த்திகை
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 5:39 AM 1 comments Links to this post
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், கார்த்திகை திருவிழா
August 20, 2009
குபேர மந்தரம்
குபேர மந்தரம்
இதை தினமும்
முறையாக
கடைபித்தால்
பணம் உங்கள் கையில் ................
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 4:05 AM 0 comments Links to this post
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம்

