AddThis

Bookmark and Share

February 26, 2009

காதல் இதுதானோ
























உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் கண்கள் என்று சந்தித்ததோ
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நாம் கைகோர்த்து நடக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் மெளனங்கள் பேசியதை
கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !!

இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை கடிந்து பேசியபின்
நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


புன்னகையில் என் சோகங்களை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


என் சுமைகளை நீ சுமப்பதை கண்டு
வியந்தேன் இது தான் காதலா என்று !!

என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நிமிடமும் உன் நினைவுகள் என்னை ஆட்கொள்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை பிறிந்த போதும் நீ என்னுள் இருக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


இன்று உன் மடியில் குழந்தையென மாறியதும்
உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!



February 24, 2009

எப்படி தெரிந்தது உனக்கு


உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஒட்டி
ஜோடியாக ரசித்தது
உனக்கு தெரியாது,

உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து எழுதி
ஆனதபட்டது
உனக்கு தெரியாது ,

உன் மேலுள்ள காதலால்
பிளேடால் கையை கீறி
ரத்தத்தால் உன் பெயரை
எழுதியது
உனக்கு தெரியாது,

இவையாவும்
தெரியாத
உனக்கு என் காதலின்
ஆழம் மட்டும்
எப்படி தெரிந்தது !!!!!!!!!

மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...


மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...

புளியமரத்தடியில்
புத்தகத்தை படிக்காமல்
அவள் புன்னகை பேசுவதையும்
அவள் கண்கள் பேசுவதையும்
கண் சிமிட்டாமல்
முட்டி மோதி படித்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை.....
-------------------------------------------------
வருகை பதிவேட்டில்
அடுத்தக்டுது
பெயர்கள் அமைந்து இருக்க
எல்லோரும் வரிசையாய்
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லிக்கொண்டுவர
அவள் பார்ப்பதற்காகவே
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லாமல்
இருந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
------------------------------------------------
எதாவது பேசலாம்
என்று
அருகில் செல்லும்போது
எதுவும் பேசாமல்
மெதுவாக
நகர்ந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை..
------------------------------------------------

February 23, 2009

உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ள ...


இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு மட்டும்தான், இது மேற்கத்திய நடைமுறை நமக்கெதற்கு என்று காதலர் தினத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் உண்டு.இவையெல்லாம் வெறும் பசப்பல்கள்தான். உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் வேண்டும்தான். தினமும் சூரியன் உதிக்கத்தான் செய்கிறது, தமிழர் திருநாள் பொங்கல் அன்று மட்டும் சூரியனை நாம் கொண்டாடவில்லையா? அதற்கென்ன சூரியன் நம்மிடம் கோபித்தாக் கொள்கிறது?காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் என்பது எந்த வகையில் நியாயம்? திருமணமானவர்கள் அவர்களது துணையை காதலிப்பதில்லையா? அதுவும் காதல்தான். அவர்களுடனும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாமே?இது மேற்கத்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறு, நமது முந்தைய காலத்திலும் இந்திர விழா, மன்மத விழா, வில் விழா என்றெல்லாம் பல பெயர்களில் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுங்களேன்.நீங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் உங்கள் துணையை அது காதலர்/காதலியாகவோ அல்லது கணவன்/மனைவியாகவோக் கூட இருக்கலாம். அவர்களுடன் கொண்டாடுங்கள் காதலர் தினத்தை எந்த எதிர்மறையான கருத்தும் இன்றி. என்ன தயாராகிவிட்டீர்களா காதலர் தினத்திற்கு... அதற்கு முன் இந்த காதல் பரிசோதனையில் பங்கேற்பீர். இதில் நீங்கள் பெற விரும்பும் முத்தம், நீங்களும் உங்கள் துணையும் கொண்டிருக்கும் நெருக்கம், இவற்றிற்கெல்லாம் மேலாக உங்கள் காதலின் அளவைக் கூறும் லவ்மீட்டர் என அடுக்கி வைத்துள்ளது .இதனைப் பார்த்து உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ளுங்கள். வாவ் என்று வாய்பிளக்கும் அளவிற்கு மதிப்பெண் வந்தால் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ கூறி மகிழுங்கள். பாராட்டையும் பெறுங்கள்.இல்லையென்றால் பரவாயில்லை. தாமதிக்காதீர் அடுத்த ஆண்டுக்குள் காதல் அளவில் சதமடிக்கும் எண்ணத்துடன் கிளம்புங்கள் காதல் கொண்டாட்டத்தில் பங்கேற்க.
காதலர் தின வாழ்த்துகள்!
பின் குறிப்பு :
இதை நான் எழுதவில்லை .நான் படித்ததை உங்களுடன் பகிந்துகொள்கிறேன் .

February 22, 2009

பிரிவையும் நேசிக்கிறேன்



பிரிவையும் நேசிக்கிறேன்
-----------------------------------------------
தனிமையில் இருந்தால் சந்தோசமாக
இருக்கலாம் என்பார்கள் சிலர்..

ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால்.
----------------------------------------------
சொல்ல நினைக்கின்றேன்

சொல்ல நினைத்தாலும்

கேட்பதற்கு யாருமில்லாமல்
புதைந்து கொள்ளும்
என் சோக வரிகள் இதோ..

---------------------------------------------
டிக்
டிக் என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டே
இருக்கும்
என்
வீட்டு சுவர்கடிகரம்
அறையின்
ஓய்வில்லா
மின்விசிறி எழுப்பும் சத்தில்
ஒரு அதியசியத்தை கண்டேன் ....
கண்டது கனவுதான்
----------------------------------
கண்ணாடி
எதிரில் நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே

---------------------------------

இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.

--------------------------------------

----------------------------------------

இன்னும்
எத்தனை
நாட்களுக்குத்தான்
நான்
எனது கைபேசிக்கு
நானே
முத்தம் கொடுத்துக்கொண்டு
இருப்பேனோ...

---------------------------------------

உனக்கும்
எனக்கும் இடையே
இருக்கும்

பல ஆயிரக்கணக்கான
கிலோமீடர்
தூர இடைவெளி
சட்டென்று குறைகிறது
தொலைபேசியில்

நீ
தந்த முத்தத்தால்...
---------------------------------------
உன்

ஒவ்வொரு முதத்திர்க்கும்
ஒரு
முத்து தராலாம்
தந்திருந்தால்

இந்நேரம்
உன் வீடே
நிறைந்துருக்கும்
ஆனால்

என் உயிர் தொட்ட
அந்த
முத்தத்திற்கு
என்ன தரலாம்...


------------------------------
-----------

February 10, 2009

Tamil see

ரசிகன்பாலு-இயற்கை காதலன்