AddThis

Bookmark and Share

December 08, 2009

சிங்கப்பூரில் கார்த்திகை







ரசிகன்பாலு-இயற்கை காதலன்
Posted by Picasa

August 20, 2009

குபேர மந்தரம்

குபேர மந்தரம்
இதை தினமும்
முறையாக
கடைபித்தால்
பணம் உங்கள் கையில் ................

August 05, 2009

பிள்ளையார் சுழிக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா!!!


எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அரத்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
"அ" "உ" "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM"என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

May 11, 2009

இதழில் கதை எழுதும் நேரமிது

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று.......

airtel
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரவி, ராகினி ரெண்டு பேரும் இதழில் கதை எழுதும் என தொடங்கும் பாடலை பாடியதை நான் இங்கு சொல்லியே ஆகா வேண்டும்

http://www.youtube.com/watch?v=0VpaTeUteHs&feature=related

இந்த பாடலின் வரிகள் இதோ உங்கள் முன்னாள்....


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

May 06, 2009

காபி - சிங்கிள் டீ நல்லதா - கெட்டதா?




காபி - சிங்கிள் டீ - ஏதாவது ஒன்று இல்லாமல் பெரும்பாலோருக்கு நேரம் நகராது; இருந்த இடத்தை விட்டு நகரவும் பிடிக்காது. அந்த அளவுக்கு இரண்டு பானங்களும் இந்தியர்களுடன் ஒட்டிவிட்டது. அதிலும், டீ குடிப்பவர்கள் கூட, காலையில் எழுந்ததும் காபி குடிக்க விரும்புவோர் அதிகம். காரணம், அதை சாப்பிட்டால் தான் ஏதோ உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல உணர்கின்றனர். தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம்.சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப் படுகிறது.


நல்லதா - கெட்டதா?


காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? - இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், மூட்டு வலி ஏற்படும்... இப்படி பல பீதிகளை இன்னமும் கூட சொல்லித்தான் வருகின்றனர்.ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


டி - ஹைட்ரேஷன்


காபி குடித்தால், உடலில் நீர் வற்றிப் போய்விடும். இது தான் "டி- ஹைட்ரேஷன்' என்பது. தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் என்று சொல்வர். ஆனால், அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.காபி 550 மில்லி குடித்தால், அதிக அளவு சிறுநீர் போவதில்லை. அதே சமயம், அதை விட குறைவான குளிர்பானம் குடித்தால், அதிக சிறுநீர் போகிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


இதய பாதிப்பா ?


இதய பாதிப்பு உள்ளவர்கள், காபியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வதுண்டு. காபியில் உள்ள காபின் சத்து, இதய பாதிப்பை அதிகப் படுத்தும் என்பது அவர்கள் கருத்து. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடித்தவர்களுக்கு, மற்றவர்களை விட, இருதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காபி மூலம், ஆரம்பத்தில் லேசான ரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால், அது நீடிப்பதில்லை. கோலாக்களில் உள்ள பாதிப்பை விட, காபியில் வெகு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.


கேன்சர் வருமா ?


காபி குடித்தால், கணையம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் வரும் என்று சொல்லி வருகின்றனர். அதுவும் பொய் என்று, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் காபி குடித்தால், கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


எலும்பு தேய்மானமா ?


காபியில், காபின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. காபி குடிப்பதால், அதில் உள்ள காபின் சத்து, உடலில் உள்ள கால்சியம் சத்து அறவே மறைந்து போகிறது. கால்சியம் சத்து இல்லாததால், எலும்புகளுக்கு திடத்தன்மை குறைகிறது. எலும்பு முறிவும், மூட்டு பாதிப்பும் ஏற்படுகிறது என்று சொல்வதுண்டு.காபியில் உள்ள காபின் மூலம் கால்சியம் குறையலாம்; ஆனால், காபியில் கலந்து குடிக்கும் பாலின் மூலம், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது என்பதே உண்மை.


எடை சரிகிறதா?


காபியில் உள்ள காபின் மூலம், ஒரு நாளைக்கு 75 முதல் 100 கலோரி வரை எரிக்கப் படுகிறது; ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடித்தால், உடலின் எடை அதிகமாக குறையும் என்று கருத்து உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் மேற் கொள்ளப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில், இதுவும் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.உண்மையில் காபி குடித்தால், அதில் உள்ள காபின் மூலம் உடல் எடை அதிகரிக்கவே செய்கிறது; குறையவில்லை என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மூட் வருதில்ல!


காபி குடித்தால், உடலுக்கு கெடுதல் இல்லை என்பது பெரும் பாலான ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள் ளது. ஆனால், நல்லதா என்று சொல்ல முடியுமா? நாம் சாப்பிடும் பல பொருட்களில், நல்லதை விட, கெட்டதில்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளன. அப்படித்தான் காபியும் என்கின்றனர் நிபுணர்கள்."உடலில் புத்துணர்ச்சி ஏற்படவும், சுறுசுறுப்பு அதிகரிக்கவும் காபியை விட சிறந்த பானமில்லை' என்று சர்வதேச புகழ் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சிகழக நிபுணர்கள் கூறுகின்றனர்.


குடிங்க... குடிங்க!


காபி குடித்தால், மூளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது.இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர் களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர் களாகத்தான் இருப்பர். அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், பர்கின்சன்ஸ் நோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறதாம்.


நீங்க காபி குடிப்பவரா? தினமும் நான்கு வேளையாவது குடிப்பீர்களா? பத்தாண்டுக்கு மேல் குடிப்பவர், குழந்தைப்பருவத்தில் இருந்தே குடிப்பவர் என்றால், தாராளமாக குடியுங்கள். கவலையே படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் வராது. டாக்டர் சொன்னாலொழிய நிறுத்த வேண்டாமே!........

March 16, 2009

காதலிக்க நேரமில்லை பாடல் வரிகள்


என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு
ஒ..என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
ஒ..பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகலாகும்
அந்த நேரத்தில் மழையென வாராயோ

ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா
உன் காதலை சிறகென தாரையா
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?

நினைக்கும் போதென் நிழலும் ஏனோ சுடுதே

March 02, 2009

முத்தம் பற்றிய முத்தான குறிப்புகள்


* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .


*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .


*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .


*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .


*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .


*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .


*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.


*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.


*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.


*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .


*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.


*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.


*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .


*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.


*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.


*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.


*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.


*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.


*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.


*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை


*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .


*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது


* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.


நன்றி - www.google.co.in
பின் குறிப்பு : அதிஷாவின் வெப் சைடில் இடம்பெற்றவை

February 26, 2009

காதல் இதுதானோ
























உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் கண்கள் என்று சந்தித்ததோ
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நாம் கைகோர்த்து நடக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் மெளனங்கள் பேசியதை
கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !!

இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை கடிந்து பேசியபின்
நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


புன்னகையில் என் சோகங்களை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


என் சுமைகளை நீ சுமப்பதை கண்டு
வியந்தேன் இது தான் காதலா என்று !!

என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நிமிடமும் உன் நினைவுகள் என்னை ஆட்கொள்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை பிறிந்த போதும் நீ என்னுள் இருக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


இன்று உன் மடியில் குழந்தையென மாறியதும்
உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!



February 24, 2009

எப்படி தெரிந்தது உனக்கு


உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஒட்டி
ஜோடியாக ரசித்தது
உனக்கு தெரியாது,

உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து எழுதி
ஆனதபட்டது
உனக்கு தெரியாது ,

உன் மேலுள்ள காதலால்
பிளேடால் கையை கீறி
ரத்தத்தால் உன் பெயரை
எழுதியது
உனக்கு தெரியாது,

இவையாவும்
தெரியாத
உனக்கு என் காதலின்
ஆழம் மட்டும்
எப்படி தெரிந்தது !!!!!!!!!

மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...


மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...

புளியமரத்தடியில்
புத்தகத்தை படிக்காமல்
அவள் புன்னகை பேசுவதையும்
அவள் கண்கள் பேசுவதையும்
கண் சிமிட்டாமல்
முட்டி மோதி படித்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை.....
-------------------------------------------------
வருகை பதிவேட்டில்
அடுத்தக்டுது
பெயர்கள் அமைந்து இருக்க
எல்லோரும் வரிசையாய்
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லிக்கொண்டுவர
அவள் பார்ப்பதற்காகவே
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லாமல்
இருந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
------------------------------------------------
எதாவது பேசலாம்
என்று
அருகில் செல்லும்போது
எதுவும் பேசாமல்
மெதுவாக
நகர்ந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை..
------------------------------------------------

February 23, 2009

உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ள ...


இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு மட்டும்தான், இது மேற்கத்திய நடைமுறை நமக்கெதற்கு என்று காதலர் தினத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் உண்டு.இவையெல்லாம் வெறும் பசப்பல்கள்தான். உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் வேண்டும்தான். தினமும் சூரியன் உதிக்கத்தான் செய்கிறது, தமிழர் திருநாள் பொங்கல் அன்று மட்டும் சூரியனை நாம் கொண்டாடவில்லையா? அதற்கென்ன சூரியன் நம்மிடம் கோபித்தாக் கொள்கிறது?காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் என்பது எந்த வகையில் நியாயம்? திருமணமானவர்கள் அவர்களது துணையை காதலிப்பதில்லையா? அதுவும் காதல்தான். அவர்களுடனும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாமே?இது மேற்கத்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறு, நமது முந்தைய காலத்திலும் இந்திர விழா, மன்மத விழா, வில் விழா என்றெல்லாம் பல பெயர்களில் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுங்களேன்.நீங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் உங்கள் துணையை அது காதலர்/காதலியாகவோ அல்லது கணவன்/மனைவியாகவோக் கூட இருக்கலாம். அவர்களுடன் கொண்டாடுங்கள் காதலர் தினத்தை எந்த எதிர்மறையான கருத்தும் இன்றி. என்ன தயாராகிவிட்டீர்களா காதலர் தினத்திற்கு... அதற்கு முன் இந்த காதல் பரிசோதனையில் பங்கேற்பீர். இதில் நீங்கள் பெற விரும்பும் முத்தம், நீங்களும் உங்கள் துணையும் கொண்டிருக்கும் நெருக்கம், இவற்றிற்கெல்லாம் மேலாக உங்கள் காதலின் அளவைக் கூறும் லவ்மீட்டர் என அடுக்கி வைத்துள்ளது .இதனைப் பார்த்து உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ளுங்கள். வாவ் என்று வாய்பிளக்கும் அளவிற்கு மதிப்பெண் வந்தால் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ கூறி மகிழுங்கள். பாராட்டையும் பெறுங்கள்.இல்லையென்றால் பரவாயில்லை. தாமதிக்காதீர் அடுத்த ஆண்டுக்குள் காதல் அளவில் சதமடிக்கும் எண்ணத்துடன் கிளம்புங்கள் காதல் கொண்டாட்டத்தில் பங்கேற்க.
காதலர் தின வாழ்த்துகள்!
பின் குறிப்பு :
இதை நான் எழுதவில்லை .நான் படித்ததை உங்களுடன் பகிந்துகொள்கிறேன் .

February 22, 2009

பிரிவையும் நேசிக்கிறேன்



பிரிவையும் நேசிக்கிறேன்
-----------------------------------------------
தனிமையில் இருந்தால் சந்தோசமாக
இருக்கலாம் என்பார்கள் சிலர்..

ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால்.
----------------------------------------------
சொல்ல நினைக்கின்றேன்

சொல்ல நினைத்தாலும்

கேட்பதற்கு யாருமில்லாமல்
புதைந்து கொள்ளும்
என் சோக வரிகள் இதோ..

---------------------------------------------
டிக்
டிக் என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டே
இருக்கும்
என்
வீட்டு சுவர்கடிகரம்
அறையின்
ஓய்வில்லா
மின்விசிறி எழுப்பும் சத்தில்
ஒரு அதியசியத்தை கண்டேன் ....
கண்டது கனவுதான்
----------------------------------
கண்ணாடி
எதிரில் நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே

---------------------------------

இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.

--------------------------------------

----------------------------------------

இன்னும்
எத்தனை
நாட்களுக்குத்தான்
நான்
எனது கைபேசிக்கு
நானே
முத்தம் கொடுத்துக்கொண்டு
இருப்பேனோ...

---------------------------------------

உனக்கும்
எனக்கும் இடையே
இருக்கும்

பல ஆயிரக்கணக்கான
கிலோமீடர்
தூர இடைவெளி
சட்டென்று குறைகிறது
தொலைபேசியில்

நீ
தந்த முத்தத்தால்...
---------------------------------------
உன்

ஒவ்வொரு முதத்திர்க்கும்
ஒரு
முத்து தராலாம்
தந்திருந்தால்

இந்நேரம்
உன் வீடே
நிறைந்துருக்கும்
ஆனால்

என் உயிர் தொட்ட
அந்த
முத்தத்திற்கு
என்ன தரலாம்...


------------------------------
-----------

February 10, 2009

Tamil see

ரசிகன்பாலு-இயற்கை காதலன்



January 19, 2009

A Way To Reach SUCCESS











STARS are not born... they are made.

A way to reach success..

வெற்றி என்பது ஒருபோதும் மந்திரமாக இருக்க முடியாது, எமது வாழ்வில் நல்ல பல பண்புகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வரும்போது, எம்மோடு வெற்றி வந்து கைகுலுக்கும். இதேபோலத்தான், ஒரே தவறுகளை தொடர்ச்சியாகச் செய்து வருகையில், எம்மோடு தோல்விகள் தோழமை கொள்கின்றன.

ஆக வெற்றி அடைவதென்பது மிகவும் எளிமையான காரியம் தான். ஏனெனில், உண்மைகள் எப்போதும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். ஆனாலும் வெற்றி பெறுவது இலகுவான காரியமாக இல்லாவிட்டாலும், எளிமையான காரியமே!

ஆக, Success என்பது பற்றி அறிந்தோம். இந்த வெற்றியை எவ்வாறு வரையறுப்பது? என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகின்றது தானே!

ஆக, வெற்றி பெறுவது நிச்சயம் என்று முடிவெடுத்து விட்டோம். இனி நாம் வெல்வோம். இருந்தும் வெற்றி பெறுவதற்கு தடையாகும் சில விடயங்களும் உண்டென்றே சொல்ல வேண்டும். கொஞ்சமாய் அவற்றை பட்டியற்படுத்துகிறேன். வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

1. தன்னம்பிக்கையின்மை
2. தோற்றுவிடுவோம் என்ற பயம்
3. திட்டமிடாமை
4. தெளிவான இலக்கு இல்லாமை
5. தாமதிக்கச் செய்தல்
6. குடும்பச் சுமை
7. பொருளாதாரக் கஷ்டங்கள்
8. இலக்குகளை வேறு விடயங்களுக்காக விட்டுக் கொடுத்தல்
9. அதிகமானவற்றை தனிமையாகச் செய்தல்
10. அதீத ஆர்வம்
11. குறைவான ஆர்வம்
12. பூரணமற்ற பயிற்சி
13. முன்னுரிமை வழங்காமை

ஆக, மேலேயுள்ள விடயங்களை எமக்குள் வராமல் தடுப்பது மிகவும் கடினமான காரியமே அல்ல. “மனமுண்டானால் இடமுண்டு” என சும்மாவா சொன்னார்கள்?

வெற்றிகளைக் குவிக்கும் ஆளுமைகளாக நாம் மாறிவிட இன்றே முடிவெடுப்போம். அதை நன்றே செயற்படுத்துவோம். வெற்றி இனி எம் பக்கம் தான்.

என் அம்மா அடிக்கடி எனிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது

“என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்.

அத்துடன் கையில களவும், வாயில பொய்யும்

இல்லாம இருந்தா ஒருவன் எங்கு இருந்தாலும்

அவனுக்கு வெற்றி தான்.

January 13, 2009

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

புகைப்படம் சிங்கபூர் சிவ-கிருஷ்ணா ஆலயத்தில் பொங்கல் வைக்கும் போது .....

தமிழுணர்வுப் பொங்கல்..!
******************************
ஸர்வதாரி- தை மாதம் முதல் தினம், இன்று பொங்கல் திருநாள்.
இது இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர்கள் பண்டிகை அல்லது முஸ்லிம் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம்.

உழவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும்.

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் "தை" யில்தான்! .
உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா! .தை மாதம் கொண்டாடப்படுவதால் "தைத் திருநாள்" என்றும் அழைக்கிறோம்.
இடது நம்ம திருவிழா
--------------------------
உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

பொங்கலோ பொங்கல் !!!!!

*******************************
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பொங்கல். "பழையன கழிதலும் புதியன புகுதலும் "இந்நாளில்தான்! .பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான் போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக் கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.
"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தர வேண்டியும் பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.


மாட்டு பொங்கல், நம் நாட்டு பொங்கல்...

`````````````````````````````````````````````````````````````````

உழவுக் கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் சரி, கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்துக் கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என்று எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றி கூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக க் கொண்டாடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஒரு சுன்டக்க விளையாட்டு

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை,வாடிப்பட்டி,அலங்காநல்லூர்,அறந்தாங்கி, கம்பம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்,காங்கேயம், கம்பம்,தஞ்சை,போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். இது தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப் போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம் ) , அப்பறம் கிழக்குசீமை படத்துல மாதிரி சாவக்கட்டு நடக்கும்.இப்ப எங்க அதெல்லாம் நடக்குது......


உறவும் நட்பும் ஒன்றுகூடுவோம் !

உவகைகொண்டு பண்பாடுவோம் !!

இல்லமெங்கும் ஒளி ஏற்றிடுவோம் !!!

இனிய பொங்கல் கொண்டாடுவோம் !!!!


தமிழர்கள் மற்றும் அனைவருக்கும் என் வலை பூ முலமாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..



Posted using ShareThis

January 03, 2009

சிந்தனை வரிகள்

************************************************************************************

************************************************************************************

************************************************************************************
************************************************************************************

எனது இனிய நண்பர் சென்னையை சேர்ந்த வெங்கட் அவர்களின் சிந்தனை வரிகளை இங்கே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல் உங்களுடைய கவிதைகள், சிந்தனை கருத்துக்கள் போன்றவற்றை பின்வரும் மின்னாஞ்சளுக்கு rasiganbalu@gmail.com , அனுப்பவும். அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி..........