AddThis

Bookmark and Share

December 22, 2008

நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது



நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?


நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?

ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?



என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா
?


தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?



துணி உலர்த்த மாடிக்குப்போகும்
போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக
அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?



நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?



தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?


நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது


1 comments:

anusooya said...

super ...http://priyasahi.blogspot.com/